Wednesday, August 28, 2013

Sri Krishna Jayanthi greetings message of CM .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி 


    காக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் இந்நன்னாளில் எனது இனிய “கிருஷ்ண ஜெயந்தி” நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

   கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில், குழந்தைகளைக் கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து, கால் தடங்களை வீட்டு வாசலிலிருந்து வரிசையாக பதிய வைத்தும், பார்ப்பவரின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோலமிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய், பழ வகைகளைப் படைத்து இறைவனை வழிபட்டு மகிழ்ச்சியடைவர்.

     செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து விட்டு, சர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, இறைவன் திருவடியை சரண் அடைபவர் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவர் என்கிறது கண்ணன் அருளிய கீதை.

      கீதையை அருளிய கண்ணன் அவதரித்த இந்தக் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களைப் பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்றும், அறச் செயல்களை மென்மேலும் வளர்த்து, தீமைகளை அகற்றி, நன்மைகள் பெருகச் செய்து, உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்றும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை “கிருஷ்ண ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்

Monday, August 26, 2013

Tamil Nadu PR Honble Chief Minister Chaired a Meeting on fixing of Auto Fare.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 25.8.2013 

      அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கே சென்று சேர்ப்பதில் முக்கியப் பங்கினை வகிப்பவை ஆட்டோ ரிக்ஷாக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

       தமிழ்நாட்டில் மொத்தம் இரண்டு லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. இவற்றில் சென்னைப் பெருநகரில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணம் 2007 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.

      இதன் பின்னர், எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை பன்மடங்கு உயர்ந்துவிட்டதால், தற்போதுள்ள கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், ஓர் அலுவல் குழு அமைக்கப்பட்டது.

       இதற்கிடையில், ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து காரணிகளையும் பரிசீலித்து ஒரு முடிவு எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.



        இதனைத் தொடர்ந்து, எனது உத்தரவின் பேரில், ஆட்டோ ரிக்ஷா கட்டண நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில், அரசு அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு முத்தரப்புக் கூட்டம் 10.8.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்டோ கட்டணங்கள் எந்த அளவுக்கு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினர்.

         இதன் தொடர்ச்சியாக, 22.8.2013 அன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. சண்முகம், உள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, சட்டத் துறைச் செயலாளர் முனைவர் கோ. ஜெயச்சந்திரன், சென்னைப் பெருநகர காவல் ஆணையர் திரு. எஸ். ஜார்ஜ் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் திரு. ஏ.எல். சோமயாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

         இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் / ஆட்டோ உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் பயனடையும் வகையில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு

1. முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ ரிக்ஷா கட்டணம் 25 ரூபாய் என்றும், ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்படும்.

2. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 விழுக்காடு இரவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

3. காத்திருப்புக் கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு 3 ரூபாய் 50 காசு என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்திற்கு 42 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும்.

4. இந்தத் திருத்திய கட்டணம் இன்று முதல் (25.8.2013) நடைமுறைக்கு வரும்.

5. திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகிதம் நாளிதழ்களில் பிரசுரம் செய்யப்படும். இதன் அடிப்படையில் பயணிகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

6. திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை 15.9.2013-க்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

7. மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும்.

8. இது மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னைப் பெருநகரில் இயங்கி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இடத்தைக் காட்டும் கருவியுடன், அதாவது ழுடடியெட ஞடிளவைiடிniபே ளுலளவநஅ-உடன் கூடிய மின்னணு இலக்க அச்சடிக்கும் இயந்திரத்துடன், அதாவது, நுடநஉவசடிniஉ னுபைவையட ஞசiவேநச உடன் கூடிய மீட்டர், விலை ஏதுமில்லாமல் அரசு செலவில் பொருத்தப்படும். இதற்காக அரசுக்கு 80 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும். மேலும், ஆட்டோ ரிக்ஷாக்களின் இயக்கங்களை கண்காணிக்கவும் வழிவகை ஏற்படும்.

9. ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரும் சூழ்நிலை உருவானால், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அபாய பொத்தானை, அதாவது ஞயniஉ க்ஷரவவடிn-ஐ பயணிகள் அழுத்தலாம். இதன் மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்து, அதன் அடிப்படையில் காவல் துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

10. ஆட்டோ ரிக்ஷாக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் தீவிரமாக கண்காணிக்கும். இந்தக் கண்காணிப்பின் போது, மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இது தவிர, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும்.

11. ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் .

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9 

Revised fare table for Autorickshaws.

Revised fare table for Autorickshaws fitted with Electronic Digital Meter

Click here to enlarge

Wednesday, August 21, 2013

Fund For Infrastructure Development of Sports.

Sanction of fund for infrastructure development of Sports - dated 21 August 2013

        விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் வகையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்கும் உரிய முனைப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

       முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், பத்து விளையாட்டுகளில் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடையே இந்தப் போட்டிகளின் தாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த போட்டிகளை மேலும் வலுப்படுத்தி, போட்டிகளின் தரம் அதிகரிக்கும் வகையில் தேசிய விளையாட்டு போட்டிகளைப் (National Games) போன்று தமிழகத்தில் “முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள்“ ஆண்டுதோறும் நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

      இப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இப்போட்டிகளுக்கென 8 கோடியே 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

        இந்தக் கோப்பைக்கான போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளான கூடைப்பந்து, கைப்பந்து. ஹாக்கி, கால்பந்து, கபாடி, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் இறகு பந்து ஆகியவைகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு 204 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என ஒரு மண்டலத்திற்கு 1,632 பேர்கள் இவ்விளையாட்டில் பங்கேற்பார்கள். மொத்தத்தில் 204 பேர் தங்கப் பதக்கமும், 204 பேர் வெள்ளிப் பதக்கமும், 204 பேர் வெண்கலப் பதக்கமும் வென்று அதற்குரிய பரிசுத் தொகையை பெறுவார்கள்.



      விளையாட்டு வீரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக நவீன தொழில் நுட்ப வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு அறிவியல் மையத்தினை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்தொகை புதிய கட்டடம் கட்டுவதற்கும், புதிய உபகரணங்கள் வாங்குவதற்கும், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நியமிப்பதற்கும் செலவிடப்படும்.

     தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 6,000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலையினால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்தக் காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித்திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும். எனவே, அரசு ஊழியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை, தலைமைச் செயலகத்தில் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் 50 லட்சம் ரூபாய் செலவில் 2,000 சதுர அடியளவில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும், 1,800 சதுர அடியளவில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்படும். இதில் 20 வகையான நவீன உடற்பயிற்சிக் கருவிகளை அமைக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     அரசின் இந்த நடவடிக்கைகள், நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும்.
*******
வெளியீடு:- இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 

Monday, August 19, 2013

About Tamil Nadu Chief Minister.

Chief Minister

Selvi J Jayalalithaa
Honble Chief Minister


Date of BirthFebruary 24,1948

Birth PlaceMysore

EducationMatriculation

Marital StatusUnmarried

Political CareerUnder the guidance of her mentor Puratchi Thalaivar Dr.M.G.R., she entered Politics and became a Member in A.I.A.D.M.K., in 1982; In January 1983 she was appoointed as the Propaganda Secretary of A.I.A.D.M.K; In February 1983, she was chosen by Dr. M.G.R. to conduct her maiden election campaign for the A.I.A.D.M.K., candidate in the bye-election to the Tiruchendur Assembly Constitutency. Her election campaign was a trial blazer securing an astounding victory for the Party candidates agaisnst all odds; In 1984 she was elected as a Member of Parliament to the Rajya Sabha and retained the seat until she was elected to the Tamil Nadu Legislative Assembly in 1989; When Dr.M.G.R., fell ill and was under medical treatment in the U.S.A., the A.I.A.D.M.K., had to fight the General Elections to the Lok Sabha and to the Tamil Nadu Legislative Assembly in December 1984. In the absence of Dr.M.G.R., she took his place and spear-headed the alliance of the A.I.A.D.M.K., and the Congress (I) securing a massive victory for the alliance; After the demise of Dr. M.G.R. in 1987, the A.I.A.D.M.K. Party split vertically into two. As the General Secretary of the Party she contested the Tamil Nadu Legislative Assembly in January 1989 and was elected from Bodinayakkanur; She became the first Woman Leader of the Opposition in the Tamil Nadu Legislative Assembly; In February 1989, the two factions of the A.I.A.D.M.K., reunited under her singular Leadership and she was unanimously elected to the post of the General Secretary of the unified A.I.A.D.M.K., In 1989 she restored the 'Two Leaves' election symbol to the A.I.A.D.M.K., Party. In the 1989 General Elections to the Lok Sabha, she steered the A.I.A.D.M.K. - Congress (I) alliance to a historic victory in the State of Tamil Nadu and the Pondicherry Unioin Territory; Thereafter she secured victories for the A.I.A.D.M.K., in all the subsequent by-elections to the Tamil Nadu Legislative Assembly from Marungapuri, Madurai East and Peranamallur Assembly Constituencies; Won a magnificent Victory by contesting in both Bargur and Kangeyam Constituencies during the General Elections to the Tamil Nadu Legislative Assembly held in 1991; Moreover, she single-handedly ensured a massive Victory for her party and the alliance by winning 225 Constituencies out of 234. Subsequently, she resigned the Kangeyam Assembly seat she had won, and made her Party candidate contest in that Constituency and made him secure an astounding Victory; Further, she was instrumental for the historic 100 percent Victory of the AIADMK and its alliance in Tamil Nadu and Pondicherry held simultaneously in 1991 General Elections to 40 Lok Sabha Constituencies, in which the alliance led by her swept to a historic Victory by winning all the 40 Lok Sabha Seats (39 in Tamil Nadu and one in Pondicherry). She was elected from Andipatti Assembly Constituency in February 2002 and May 2006; Elected from Srirangam Assembly Constituency in May 2011; Chief Minister from 24.06.1991 to 12.05.1996, from 14.05.2001 to 21.09.2001, from 02.03.2002 to May 2006 and from 16.05.2011.

Award & Titles conferredHonoured with the Award 'Kalaimamani' by the Tamil Nadu Government in 1972; The University of Madras on 19th December 1991 has honoured her by conferring on her the Degree of Doctor of Literature (D.Ltt.) Honoured with the Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine. Honoured with the Paul Harris Fellow Recognition and Life-time achievement Award by the Rotary International.

Foreign TravelsU.S.A., Singapore, Malaysia, Hongkong, Thailand, Japan, Nepal.

HobbiesReading, Music, Agriculture.

Publications / ContributionsWritten several articles in English and Tamil which have been published in various periodicals. Written four full length novels and several short stories in Tamil.

Public, Social & Cultural ActivitiesCricket, Tennis, Swimming, Horse Riding, Basket Ball, Chess, Athletics,

Contact Address'Veda Nilayam', 81/36, Poes Garden, Chennai-600 086.

Contact Number044 24991222(R) , 044 25672345(O),EXTN-5666

Fax044 25671441

Emailcmcell@tn.gov.in

Additional InformationShe was educated at the Bishop Garden Girls' High School in Bangalore and later at the Presentation Convent Church Park in Madras. On completion of Matriculation in 1964, she won a scholarship from the Government of India for higher studies but did not accept it as she took up a career in films in Tamil, Telugu, Kannada, Hindi, English and Malayalam. She was trained in classical dance (Bharatha Natyam) and carnatic music from the age of 4 onwards. She is proficient in other dance-forms such as Mohini Attam, Kathak, Manipuri. She has given hundreds of performances in Bharatha Natyam all over India and has sung several songs herself in her films. She is proficient in English, Tamil, Telugu, Kannada, Hindi and can understand Malayalam very well.

Sanction Of Funds For Government Hospitals.

Sanction of funds for the development of Government Hospitals

       தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் சுகாதார பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகளை அளித்தல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.


        சென்னை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூட்டு, தசை, திசு இணைப்பு (Rheumatology Department) பிரிவு, தற்பொழுது ஒரு இணை பேராசிரியர் மற்றும் ஒரு உதவி பேராசிரியர் ஆகிய குறைந்த எண்ணிக்கையுள்ள மருத்துவர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. மூட்டு தசை, திசு இணைப்பு சம்பந்தமான நோயாளிகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை பெற்றிட ஏதுவாக, இப்பிரிவுக்கென 2 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், இப்பிரிவுக்கென தனியாக 20 படுக்கைகளுக்கு ஒப்பளிப்பு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இப்பிரிவில் பணியாற்றுவதற்காக இணை பேராசிரியர் (Immunology) 1, உதவி பேராசிரியர் (Rheumatology) 1, உதவி பேராசிரியர் (ஆiஉசடிbiடிடடிபல) 1, செவிலியர் 10, பெண் செவிலியர் உதவியாளர் 1, ஆண் செவிலியர் உதவியாளர் 1, சமூக பணியாளர் 1, தட்டச்சர் 1, பிசியோதெரப்பிஸ்ட் 1, ஆய்வக மேற்பார்வையாளர் 1, ஆய்வக தொழில் நுட்பாளர் நிலை ஐ - 1, ஆய்வக தொழில் நுட்பாளர் நிலை ஐஐ - 1 என மருத்துவர் மற்றும் மருத்துவர் அல்லாத 21 பணியிடங்களை உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 15 லட்சத்து 71 ஆயிரத்து 48 ரூபாய் செலவினம் ஏற்படும். இப்பிரிவிற்கென தனியாக தளவாடங்கள் வாங்குவதற்கு 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

         தேனி மாவட்டம், தேனி மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள பெரியகுளத்தில் இந்த கல்வியாண்டு முதல் புதியதாக செவிலியர் கல்லூரி ஒன்று துவங்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இக்கல்லூரி 50 மாணவ, மாணவியர் சேர்க்கையுடன் துவக்கப்படும். இக்கல்லூரியில் பணியாற்ற முதல்வர் பதவி 1, துணை முதல்வர் பதவி 1, விரிவுரையாளர் 1 ((Reader in
Nursing), ஆசிரியர் 5 ((Lecturer in Nursing), செவிலியர் ட்யூட்டர் (Tutor)நிலை II - 16, நூலகர் 1, நிர்வாக அலுவலர் 1, அலுவலகக் கண்காணிப்பாளர் 1, உதவியாளர் 1, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 1, காவலர் 2, காப்பாளர் 1, சுகாதாரப் பணியாளர் 2 என 34 பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

       புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான பணியாளர்களின் சம்பளம், எரிபொருள், உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் சில்லரை செலவினங்களுக்காக தொடர் செலவினமாக ரூபாய் 2.15 கோடியும், தொடரா செலவினமாக இக்கல்லூரிக்கான சொந்தக் கட்டடம் கட்டுதல் மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூபாய் 8.99 கோடியும், உபகரணங்கள், அறைகலன்கள், நூலகப் புத்தகங்கள், பத்திரிக்கைகள், எழுதுபொருள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக ரூபாய் 2.40 கோடியும் என மொத்தம் ரூபாய் 13.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

     200 படுக்கைகளுக்கு மேல் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு (Intensive Care Unit), அவசரப் பிரிவு (Emergency Ward), மகப்பேறுப் பிரிவு (Maternity Ward) மற்றும் பச்சிளங் குழந்தைப் பராமரிப்பு (Neonatal Care) பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் புற ஆதார முறையில், 8 மணி நேர பணி சுழற்சி அடிப்படையில் பணி செய்ய, 286 பாதுகாப்புப் பணியாளர்கள் (Security Personnel) மற்றும் 868 காவல் பணியாளர்களை (watchman) நியமனம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

வெளியீடு:- இயக்குநர்,செய்தி-மக்கள் தொடர்புத்துறை,சென்னை-9

Wednesday, August 14, 2013

Chief Ministers Medal on The Occasion of Independence Day.



சுதந்திர தினத்தையொட்டி, இந்த ஆண்டு 8 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க மாண்புமிகு முதலமைச்சரின் ஆணை! 

     புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குத் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் :



திருவாளர்கள் 

1. எம்.குணசேகரன்,
காவல் ஆய்வாளர், கே.கே.நகர் காவல் நிலையம்,
திருச்சி மாநகரம்.

2. இரா.தனராசு,
 காவல் ஆய்வாளர், மத்திய குற்றப் பிரிவு,
 திருப்பூர் மாவட்டம்.

3. சி.ராஜக்குமார் நவராஜ்
 காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை,
 தூத்துக்குடி மாவட்டம்.

4. பி.ஆர்.சிதம்பர முருகேசன்
 காவல் ஆய்வாளர், திட்டக்குடி காவல் நிலையம்
 கடலூர் மாவட்டம்.

5. பா.குமார்
 காவல் ஆய்வாளர், விக்கிரவாண்டி காவல் நிலையம்
 விழுப்புரம் மாவட்டம் .

        இதேபோன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் :

திருவாளர்கள் 

1. விஜேந்திரபிடாரி, இகாப.,
காவல் கண்காணிப்பாளர்,
திருநெல்வேலி மாவட்டம்.

2. பெ.கு. பெத்து விஜயன்
 காவல் துணை கண்காணிப்பாளர்,
 தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை,
 தலைமையிடம், சென்னை.

3. கி. ஸ்ரீதரன்
 காவல் உதவி ஆணையாளர்,
 நுண்ணறிவுப் பிரிவு ,
 திருச்சி மாநகரம்.

     விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

    மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.

வெளியீடு: 
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

Independence Day Message of the Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சுதந்திர தினத் திருநாள் வாழ்த்துச் செய்தி.

    இந்திய திருநாடு ஆங்கிலேயரின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து சுதந்திரம் பெற்ற பொன்னாளான இந்த இனிய நாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“முப்பது கோடி முகமுடையாள் – உயிர் 
மொய்ம்புறமொன்றுடையாள் – இவள் 
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் 
சிந்தனை ஒன்றுடையாள்” 

          என்று மகாகவி பாரதியார் அவர்கள், இந்திய மக்கள் மதம், மொழி, இனம் என்னும் வகையில் வேறுபட்டிருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒரே சமுதாயமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பை உலகிற்கு பறைசாற்றுகிறார். தாய் மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டிட நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தில், நாடு முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்றிட வழி வகை செய்தனர். அத்தகைய தியாகச்சீலர்களின் தியாகத்தை போற்றி, அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிக் காத்து, நாடு வளம் பெற நாம் அனைவரும் சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டும்.



    இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகத் போராடி மறைந்த பல தியாக வீரர்களைக் கொண்ட வீரமிக்க மாநிலம் நம் தமிழகம் ஆகும். அத்தகைய தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்துவதுடன், அவர்தம் தியாகங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்திட உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செலுத்துவதுடன், தியாகிகளுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவப் படிகளை உயர்த்தி வழங்குதல் போன்ற எண்ணற்ற பணிகளைச் செவ்வனே செய்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

      சுதந்திரம் என்னும் சொல்லை உரிமை என்று எடுத்துக் கொள்வதை விட கடமை என்று செயல்பட்டால், இந்தியத் திருநாட்டை வல்லரசாகவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும் உருவாக்கிடலாம் என்பதனை தெரிவித்து, அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

Tuesday, August 13, 2013

Sanction Funds for Tribal Cultural Centre, Nilgiris.

     Sanction of funds for Tribal Cultural Centre, Nilgiris.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது நீலகிரி மாவட்டமாகும். இம்மாவட்டம், இந்தியாவிலுள்ள கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் நிலவும் இயற்கை எழிலை ரசிப்பதற்காக ஆண்டுதோறும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

      இம்மாவட்டத்தில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் கொண்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பழங்குடியின மக்களின் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் இம்மாவட்டம் முழுவதும் பிரதிபலிக்கின்றது.

    இம்மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள இயற்கை சூழ்நிலையை மட்டும் ரசிக்காமல், இங்குள்ள மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள்.



     எனவே பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும், அவர்களது பண்பாட்டினை பாதுகாத்திடும் வகையிலும், அவர்களது கலாச்சாரத்தின் மேன்மையை மக்களிடையே எடுத்துச் செல்வதற்காகவும் ஒரு அரசு சார்ந்த அமைப்பு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் ஒன்றினை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இம்மையம் பழங்குடியின மக்களின் நலனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து பழங்குடியின மக்களுடைய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திடும் அமைப்பாகவும் செயல்படும்.

     இந்த மையத்தின் மூலம் மலைவாழ் மக்களின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரே கூரையின் கீழ் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென ஒரு நவீன கலையரங்கம், பொருட்காட்சிக் கூடம், அருங்காட்சியகம் மற்றும் நிலையான விற்பனை அரங்குகளுடன் கூடிய பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் அமைக்கப்படும்.

     இந்த பண்பாட்டு ஆதார மையத்தை ஒரே சமயத்தில் 984 பேர் அமரக்கூடிய தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் 51,881 சதுர அடி பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் அமைப்பதற்கும், இம்மையம் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில், தாவரவியல் பூங்காவிற்கு அருகில் அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இம்மையத்தினை கட்டுவதற்காக 10 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

   அரசின் இந்த நடவடிக்கை நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தினை உலகறிய செய்ய வழிவகுக்கும்.

வெளியீடு:- இயக்குநர்,செய்தி-மக்கள்தொடர்புத்துறை, சென்னை-9 

Renovation of Paralaiyar Canal.

    Honble Chief Minister sanctioned funds for the renovation of Paralaiyar Canal in Ramanathapuram District

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் தி ட்டம் IAMWARM, உலக வங்கி நிதியுதவியுடன் 2005 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதற்காக 2,082 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 6.69 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க திட்டமிட்டது. இதன் கீழ் இதுவரை 25 மாவட்டங்களில் 4,910 ஏரிகள், 662 அணைக்கட்டுகள் மற்றும் அதன் 8,590 கிலோ மீட்டர் நீர்வழங்கு வாய்க்கால்கள் ஆகியவற்றை புனரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.



        வைகை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் கிடைக்கும் அதிக அளவு நீர், வைகை நதியின் இணைக் கால்வாயான பரலையாறு கால்வாய்க்கு திருப்பி விடப்படும். இதன் மூலம் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதியிலுள்ள ஏரிகள் மிகவும் பயன் பெறும். ஆனால் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் அதிக அளவு நீரினை கொண்டு செல்லும் வகையில் பரலையாறு கால்வாய் இல்லாததால், மிகை நீர் வீணாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த நிலைமையை போக்கி, அதிக அளவு நீரினைக் கொண்டு செல்லும் வகையில், இந்தக் கால்வாய் சீரமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே, முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ், 22 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் பரலையாற்று கால்வாயினை மேம்படுத்தி சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

        அரசின் இந்தத் திட்டத்தின் மூலமாக, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களில், வறட்சி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உள்ள 54 கண்மாய்கள் மூலம் 4,957 ஏக்கர் நிலங்களில் பாசனம் உறுதிப் பெறும். 

Thursday, August 8, 2013

Award Scheme for Students.

Honble Chief Minister Merit Award Scheme for Backward Classes, Most Backward Classes, Denotified Communities and Minority students.





Extension Notification For On-line Applications Through TAHDCO.


கால நீட்டிப்பு 

      தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிக்க கால அவகாசம் 20.08.2013 வரை நீடிப்பு.

      இக்கடன் உதவி பெற 10.08.2013 வரை விண்ணப்பம் செய்யலாம் என்ற கால அவகாசம் தற்போது 20.08.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும் 

Free Training For Differently Abled.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருமாத இலவச மல்டிமீடியா பயிற்சி அறிவிப்பு 

      மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் 100 நபர்களுக்கு ஒரு மாத பல்லூடக பயிற்சி (Multimedia Trining) மற்றும் 100 நபர்களுக்கு இலக்க புகைப்பட பயிற்சி (Digital Photography Training) தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், சென்னையில் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.21. 00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். இப்பயிற்சிக்கான தகுதிகளாக, மாற்றுத் திறனாளிகள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 16 முதல் 40 வயது வரம்புக்ளுள் இருக்க வேண்டும். விடுதி வசதி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு விடுதி வசதியும் மற்றும் பயிற்சி உதவித் தொகையாக ரூ.1,000/- வழங்கப்படவுள்ளது.



      இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள், விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்று நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன், பெயர் மற்றும் முகவரி, வயது, கல்வித் தகுதி, மாற்றுத் திறன் தன்மை மற்றும் சதவீதம், விடுதி வசதி தேவையா என்ற விவரம், தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களுக்கு நேரிலோ/ தபால் மூலமாக 16.8.2013க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

Ramzan Greeting Message From the Honble Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “ரம்ஜான்” திருநாள் வாழ்த்துச் செய்தி 

     ஈகை திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

     புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை எளியோரின் ஏழ்மையை போக்கிட உணவும், செல்வமும் வழங்கி, சிறப்புத் தொழுகைகள் செய்து இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.



     அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தருமம் செய்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அனைவரும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட உறுதியேற்போம்.

     இந்தப் புனித ரம்ஜான் பெருநாளில் எல்லா துறைகளிலும் தமிழகம் சிறப்பு எய்திட நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்திடுவோம் என்று கூறி எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் .

வெளியீடு: 
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9 

Saturday, August 3, 2013

Statement of CM On Indira Ninaivu Kudyiruppu Thittam.

           மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு, கிராமப்புற மக்களின் நலனுக்காக “முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான வீட்டு வசதி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர, கிராமப்புறப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களின் நலன் கருதி அவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டும் திட்டத்தினை மைய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

              இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான அலகுத் தொகை 45000 ரூபாய் என மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய அரசின் பங்கு 33750 ரூபாய் ஆகும். மாநில அரசின் பங்கு 11250 ரூபாய் ஆகும். மேலும் கான்கீரிட் கூரைகளுக்கு என தனியாக மாநில அரசால் 30000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 2011-ஆம் ஆண்டு மூன்றாம் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு கான்கீரிட் கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து வழங்கப்படும் தொகையினை 30000 ரூபாயிலிருந்து 55000 ரூபாயாக உயர்த்தி வழங்கி ஆணையிட்டார்கள். இதன் மூலம் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான அலகுத் தொகை 1 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

          இந்த ஆண்டு (2013-2014) முதல் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான அலகுத் தொகையை 1 லட்சம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதில் மத்திய அரசின் பங்குத்தொகை 52500 ரூபாய் ஆகும். மாநில அரசின் பங்குத் தொகை 67500 ரூபாய் ஆகும்.

          இந்த ஆண்டு (2013-2014) இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 88436 வீடுகள் தமிழ்நாட்டில் கட்டப்பட இலக்கு நிர்ணயித்துள்ளது. 88436 வீடுகளுக்கான மாநில அரசின் பங்குத் தொகையான 603 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

வெளியீடு : இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,சென்னை-9