Thursday, November 5, 2015

The Training in Traditional Arts for the Youth

கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

"பாரம்பரிய கிராமியக் கலைகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்தல் "

கலை பண்பாட்டுத்துறையின் அங்கமாகத் திகழும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், முத்தமிழான இயல், இசை, நாடகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு கலைப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு தமிழக கலை வடிவங்கள் அழிந்து வரும் நிலையில், அக்கலைகளை இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சென்றால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதால், ஆர்வமுள்ள இளங்கலைஞர்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுநர்களைக் கொண்டு அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளில் இளைய சமுதாயத்தினருக்கு பயிற்சி அளித்திட அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையினை செயல்படுத்திடும் நோக்கில், நாட்டுப்புறக் கலைகளான பொய்க்கால் குதிரை, கரகம், காவடி ஆகியவற்றில் ஒரு மாத பயிற்சி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் 15.11.2015-க்குள் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு தன்விவரக்குறிப்புடன் (Bio-Data) விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் 30 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் (முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்). இப்பயிற்சியானது 23.11.2015 அன்று தொடங்கி ஒரு மாத பயிற்சியாக மாலை நேரத்தில் ( மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை) நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-24937471 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments :

Post a Comment