Wednesday, November 11, 2015

TN Minister distributed food packets to the people of flood effected areas

Honble Minister for Commercial Taxes and Registration distributed food packets to the people of flood effected areas




CM chaired a meeting on the preventive measures and the action taken for the North East Monsoon

 Honble Chief Minister chaired a meeting with Honble Ministers and Secretaries on the preventive measures and the action taken for the North East Monsoon

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடனேயே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நான் உத்தரவிட்டிருந்தேன். உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகைகளை உயர்த்தி நான் ஆணையிட்டேன். பருவமழை பாதிப்பை விரைந்து எதிர்கொண்டு நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். இது தொடர்பாக ஒரு அறிக்கையினையும் நான் 4.11.2015 அன்று வெளியிட்டிருந்தேன்.

எனது உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் மின்வாரியம் ஆகியவை உள்ளிட்ட அரசுத் துறைகள் மிகுந்த விழிப்புடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடிய 440 மி.மீ. மழை பெறப்படும். வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக கடந்த மூன்று நாட்களில் 300 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட சராசரி மழை அளவு 697 மி.மீ. ஆகும். தற்போது வரை 500 மி.மீ. மழை பெய்துள்ளது. எனவே, கடலூர் மாவட்டத்தில் பெருமழை காரணமாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

8.11.2015 மற்றும் 9.11.2015 ஆகிய நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 266 மி.மீ. மழை பெய்துள்ளதால், கடலூர் மாவட்டம் மழையால் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்துள்ளதால், 9.11.2015 அன்று மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. ககன்தீப் சிங் பேடி அவர்களை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க நான் உத்தரவிட்டதின்பேரில், 9.11.2015 அன்று முதல் திரு ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள் கடலூரில் முகாமிட்டு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கென அனுப்பப்பட்ட திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான பணிகளை துரிதமாக  மேற்கொண்டுள்ளது. ஊரக வளர்ச்சி இயக்குநர் திரு பாஸ்கரன் இஆப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு பிரகாஷ் இஆப., தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு விஜயராஜ்குமார், இஆப., தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு சாய்குமார் இஆப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு மகரபூஷணம், இஆப., தொழில் துறை கூடுதல் செயலாளர் திரு எம்.எஸ் சண்முகம் இஆப., கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் திரு.ஆபிரகாம், இஆப., பொது சுகாதாரத் துறை இயக்குநர் திரு குழந்தைசாமி ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25000 பேர், நகரப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 4000 பேர் என மொத்தம் 29000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளில் மூன்று பொது சமையல் கூடங்களும், கிராமப் பகுதிகளில் எட்டு பொது சமையல் கூடங்களும் இயங்கி வருகின்றன. இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தலா 2 துணை ஆட்சியர்கள் தலைமையில், 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நான்கு துணை ஆட்சியர்கள் மற்றும் 23 சார் நிலை அலுவலர்கள் கொண்ட குழுக்கள், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருமழை காரணமாக 2000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டது.

கடலூர் மாவட்டத்தில் 8 கூட்டுக் குடிநீர் திட்டங்களில், 7 திட்டங்களுக்கான மின் ஊட்டிகளும், 180 ஊரக மின் ஊட்டிகளில் 153ம், நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து 51 மின் ஊட்டிகளும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு சீரான முறையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின் விநியோகத்தை சீரமைக்க, வெளி மாவட்டங்களிலிருந்து 2000 மின் வாரிய ஊழியர்கள் கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்காணும் பணிகளை மின் வாரிய தலைவர் தலைமையில், தலைமைப் பொறியாளர் மற்றும் சார் நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் மின் விநியோகம் தடைப்பட்டிருந்த 683 கிராம ஊராட்சிகளில், 430 கிராம ஊராட்சிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள கிராமப் பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது.

 மின் விநியோகம் தடைபட்டிருந்த போது ஜெனரேட்டர்கள் மூலம் நகரப் பகுதிகளில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. இன்னமும் மின் விநியோகம்  சீர் செய்யப்படாத கிராம ஊராட்சிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மற்றும் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ஆகியோர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 37 நகரும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்றுநோய் ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் வடலூர் - கும்பகோணம் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்ததும், முறையாக பயிர் சேதத்தினை ஆய்வு செய்து நான் ஏற்கெனவே அறிவித்த நிவாரண தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் மீன்பிடி கிராமத்திலிருந்து சுமார் 100 FRP வல்லங்கள் கெடிலம் ஆற்று வெள்ளத்தினால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்புப் படை உதவியுடன் நேற்றும், இன்றும் வான்வழித் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதில், இரண்டு இடங்களில் சுமார் 40 வல்லங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு கடலோர காவல் படையுடன் இணைந்து மாநில மீன்வளத் துறை மேற்கொண்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் 90 கால்நடை மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை கால்நடைகளுக்கு உரிய தடுப்பூசி போடுவதுடன் தேவையான சிகிச்சையையும் அளித்து வருகின்றன

. தற்போதைய வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் கடலூர் மாவட்டத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அதே போன்று கால்நடை இழப்பு மற்றும் குடிசைகள் சேதங்கள் ஆகியவற்றுக்கும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் மாண்புமிகு நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.நத்தம் இரா. விசுவநாதன், மாண்புமிகு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்  துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் ஆகியோரை கடலூர் மாவட்டத்திற்கு நான் அனுப்பி வைத்துள்ளேன்.

இதர மாவட்டங்களிலும் மழை பாதிப்பு இல்லாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேதங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Tamil Nadu Small Industries Corporation (TANSI) - Vacancy Notification for the post of Chemist

Vacancy Available

Advertisement No. 213/EB1/2010

Applications are invited from eligible candidates for one post of CHEMIST


Number of vacancies01 [General Turn]
Qualification :

Graduate in Chemistry from a recognized University.
Experience :

Post-qualification experience of 2 years in Government or Public Sector Undertaking in the field of paint and allied products manufacturing process.
Scale /Pay Band :

PB2 - Rs. 9,300-34,800 + G.P. Rs.4,300/- with Dearness Allowance and other usual Allowances as applicable to the post.
Place of Posting : Chennai.
Age :
Catogery
SC/ST
MBC
BC
BC(M)
OC
Age Limit as on 1.1.2015
35
32
32
32
30

Last date for receipt of application: 30.11.2015


Application form may be downloaded from the Website of TANSI or obtained from the Manager (Administration) in person. The filled up application along with a Passport size photo and photo copies of testimonials may be sent by post duly addressed to the General Manager, TANSI, A-28, Thiru-Vi-Ka Industrial Estate, Chennai – 600032 to reach him before 30.11.2015 Afternoon.

Download Application form




CM Statement on Administrations to gear up for rains

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உயர்அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்கள். இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்வாரியம், காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் வடக்குப் பகுதியிலுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

சென்னை மாநகரில் 131 பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் 4000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களைக் கொண்டு பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றியது. மேலும், சாலைகளில் விழுந்துகிடந்த 125 மரங்கள் அகற்றப்பட்டு சாலை போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் தீபாவளிக்காக பல்வேறு பொருள்களை வாங்கும் கடைவீதிகளில் சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு 8000 உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சியிலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு நிவராணப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை மாநகரில் மழை நிவாரணப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர்

திருமதி பா வளர்மதி, மாண்புமிகு கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ் கோகுல இந்திரா, மாநகராட்சி மேயர் திரு சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர், இஆப மற்றும் உயர் அதிகாரிகள் மழைநீரை அகற்றும் பணிகளைப் மேற்பார்வையிட்டு சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இந்திய வானிலை மையம் அறிக்கையின்படி வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூருக்கு அருகிலேயே நிலை கொண்டு மாலை 8.45 மணியளவில் கரையை கடந்தது. இதனால் கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து அதிகளவில் மழை பெய்யும் என்றும் வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரளவிற்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மணிக்கு 45கி மீ முதல் 55 கி மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

இன்று (9.11.2015) காலை முதல் கடலூர் மாவட்டத்தில் 13.7 செ.மீ மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 32 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழ் நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை

நடவடிக்கையாக இன்று காலையிலிருந்து கடலூர் மாவட்டத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளது. மாலையிலிருந்து படிப்படியாக மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 650 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விருத்தாச்சலம் வட்டத்திலுள்ள வடக்கு வேலூர் கிராமம் மழை நீரால் சூழப்பட்டதால் 150 குடும்பங்கள் மேடான பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் நிவாரணக்குழு கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரையோரங்களில் வாழும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பால் விநியோகம் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் நிவராணம் மற்றும் சீரமைப்புப்பணிகளை மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் திரு டி கே எம் சின்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்தில் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு பி வி ரமணா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து செல்லும் போது திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை அனுப்ப உத்தரவிட்டதின் பேரில் கடலூர் மாவட்டத்திற்கு திரு ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு திரு பிரதீப் யாதவ் இ.ஆ.ப, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு திரு ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் திரு மஞ்சுநாதா இ.கா.ப அவர்கள் கடலூரில் முகாமிட்டுள்ளார்.

Monday, November 9, 2015

Greeting message of the Honble Chief Minister on account of Deepavali Festival

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “தீபாவளி” வாழ்த்துச் செய்தி

நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.



தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Friday, November 6, 2015

Statement From the Health and Family Welfare Department

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

547 சிறப்புப்பிரிவு உதவிமருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் அறிவிப்பு:-

2012–ஆம் ஆண்டில், நாட்டிலேயே முதன் முறையாக, மருத்துவப் பணியாளர்களை தேர்வுசெய்ய, மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தால் மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் இதுவரை 14,208 மருத்துவர் மற்றும் இதரபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, 2013-14-ஆம் ஆண்டில் 3015 உதவிமருத்துவர் பணியிடங்களும், 2014-15 ஆம் ஆண்டில் 2645 உதவிமருத்துவ அலுவலர்களின் காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது அரசு மருத்துவ நிலையங்களில் 34 சிறப்புபிரிவுகளில் காலியாகவுள்ள 547 உதவிமருத்துவர் (Assistant Surgeon in 34 different Specialities) பணியிடங்களை விரைவாக நிரப்ப ஏதுவாக வாக்-இன் (Walk-in selection process) தேர்வு முறை என்ற எளிய முறையில் சிறப்புப்பிரிவு பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்து அதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 547 சிறப்புப்பிரிவு உதவி மருத்துவர்களை நியமிக்க 25.10.2015 அன்று விரிவான அறிவிப்பினை www.mrb.tn.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் 16.11.2015 வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.mrb.tn.gov.in) ஆன்-லைன் (Walk-in selection process)மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு, நடைமுறையிலுள்ள இடஒதுக்கீடு விதிமுறைகளுக்குட்பட்டு வாக்-இன் (றுயடம-in ளநடநஉவiடிn யீசடிஉநளள) தேர்வுமுறையின் மூலம் காலியாக உள்ள 547 சிறப்புப்பிரிவு மருத்துவ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள மருத்துவர்கள் அனைவரும் 16.11.2015-க்குள் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள்.

Communique of Finance Department

FINANCE (WAYS AND MEANS - II) DEPARTMENT

Government of Tamil Nadu has announced the sale of 10 year securities in the form of Stock to the Public by auction for an aggregat e amount of Rs.1200.00 Crore. The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on November 10, 2015. Competitive bids between 10.30 A.M. and 12.00 P.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on November 10, 2015.

 K. SHANMUGAM,
Principal Secretary to
 Government of Tamil Nadu,
 Finance Department, Chennai-9


Free Training for TNPSC Group II Examination

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் TNPSC Group-II தேர்விற்கு இலவச பயிற்சி

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி -I, தொகுதி-II தொகுதி IV, கிராம நிர்வாக உதவியாளர்), IBPS தேர்வுகள், ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. மேலும், இவ்வட்டங்களில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் உள்ளன.

 தற்போது TNPSC Group-II (A) ல் உள்ள Personal Clerk, Assistant, Planning Junior Assistant, Lower Division Clerk and Junior Co-Operative Auditor ஆகிய பணிகளுக்கான 1947 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11/11/2015 ஆகும். இத்தேர்விற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும், வாரம் ஒருமுறை தேர்வு மற்றும் பயிற்சி இறுதியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 சி.சமயமூர்த்தி,
 இயக்குநர். வேலைவாய்ப்பு மற்றும்
 பயிற்சித்துறை, இயக்ககம், சென்னை-32



Art and Culture Department on financial Assistance to the best Artist

கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு

தமிழக அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறையின் அங்கமான, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனியாக தனிநபர் கண்காட்சியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக்கண்காட்சியாகவோ நடத்த அரசின் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகுதிவாய்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறை – ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (BIO- DATA), சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் ( 5 எண்ணிக்கைகள் ), அவரவர்கள் படைப்புத்திறன் பற்றிய செய்திக் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 30.11.2015-க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)

ஆணையர்(பொ),கலை பண்பாட்டுத்துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்,
 தமிழ்ச்சாலை, எழும்பூர்,சென்னை-600 008.
தொலைபேசி : 044-28193195, 28192152



Job opportunity in Sharjah, United Arab Emirates for Clerks and Drivers

The Overseas Manpower Corporation Ltd., Chennai - Job opportunity in Sharjah, United Arab Emirates for Clerks and Drivers

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான சார்ஜாவிற்கு 30 முதல் 35 வயதிற்குட்பட்டு செல்லத்தக்க ஐக்கிய அரபு குடியரசு ஓட்டுநர் உரிமம் எண்.3 வைத்துள்ள இரண்டு இலகுரக வாகன ஓட்டுநர்கள், உரிமம் எண்.3 & 6 வைத்துள்ள ஒரு பஸ் ஓட்டுநர் மற்றும் உரிமம் எண் 7 & 8 வைத்துள்ள இரண்டு போர்க்லிப்ட் (Forklift) & ஜேவிசி ஓட்டுநர்கள் மற்றும் எட்டு வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்டு பி.காம் தேர்ச்சி பெற்று கணக்குப் பிரிவில் அனுபவமுள்ள 2 கிளார்க் (Clerk)மற்றும் தட்டச்சர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான பணி விவரங்கள், அனுபவம், வயது வரம்பு, ஊதியம், மற்றும் இதர சலுகைகளை  www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் இருப்பின் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி தொழிற்பேட்டை, சென்னை 600 032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு  www.omcmanpower.com என்ற ஈமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.


Thursday, November 5, 2015

State Level Workshop on Sanitation jointly organised by Government of TN, Government of India and UNICEF

Honble Minister for Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons inaugurated the State Level Workshop on Sanitation jointly organised by Government of Tamil Nadu, Government of India and UNICEF


Admission Notification to ITI Courses - Fitter, Electrician and MMV

Adi Dravidar and Tribal Welfare Department on the admission notification to ITI Courses - Fitter, Electrician and MMV

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நலனுக்காகவும், தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதிக அளவில் தொழில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவையினை ஈடு செய்யவும், தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விழையும் மாணாக்கர்களின் ஆர்வத்தை ஈடு செய்யும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட 2014-2015ஆம் ஆண்டிற்கான அறிவிப்பின் படி திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெறுகின்றது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு வெல்டர் மற்றும் வயர்மேன் பயிற்சி வகுப்புகளும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பிட்டர், எலக்டீரிசியன் மற்றும் மோட்டார் வாகனம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேரும் மாணவ/மாணவியர்களுக்கு மடிக்கணிணி, மிதிவண்டி, சீருடைகள், வரைபடக்கருவி மற்றும் பேருந்து கட்டணங்கள் இலவசமாக வழங்குவதுடன் பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.500/- வழங்கப்படும். மாணவர்களுக்கு வயது வரம்பு 14வயது முதல் 40 வயதிற்குள்ளாகவும், மாணவியர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. இப்பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் படிவங்கள் பெற்று அனுப்புவதற்கு கடைசி நாள்16.11.2015 என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பப் படிவம் பெறும் முகவரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளூர் மாவட்டம்.

 இயக்குநர்
 ஆதிதிராவிடர் நலத்துறை


Results of Army Recruitment CEE 18th October 2015 - Chennai Zone

TN Ministers chaired a meeting on the preventive measures to be taken for the rainy season disease

Honble Minister for Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons, Honble Minister for Animal Husbandry and Honble Minister for Health chaired a meeting on the preventive measures to be taken for the rainy season disease


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்று நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்து அலுவலர்களுடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம) சிறைச்சாலைகள்துறை அமைச்சர், மாண்புமிகு கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர், மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசனை!
தொற்றுநோய் தடுப்பு பணியில் உள்ளாட்சி அமைப்பினர், சுகாதாரதுறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்! மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம) சிறைச்சாலைகள்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் அறிவுரை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, தமிழகத்தில் எடுக்கப்பட்ட போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக தொற்றுநோய் பரவல் கட்டுக்குள் உள்ளது !
அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளது மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தகவல்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரத்துறை சார்பில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம) சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் திரு.டி.கே.எம்.சின்னையா மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் தொற்று நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பன்முக நடவடிக்கைகளை (Multi Dimensional Activities) எடுத்து வருகிறது. மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இதுவரை 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மண்டல / மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம) சிறைச்சாiகைள் துறை அமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரால் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று (05.11.2015) காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடத்தில் இது தொடர்பாக மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், கொசுவினால் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், அதை முழுமையாக ஒழிப்பதற்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கினார்கள்.

i. தமிழகத்தில் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்து, அதன் மூலம் பரவும் காய்ச்சலை தடுக்கும் வகையில், வீடுகளில் நீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்வது,  குடிநீரைக் காய்ச்சி பருகுதல், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் கொசுக்கள் நுழையாவண்ணம் மூடி வைத்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ii. அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், புகை மருந்து அடிக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கவும், பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

iii. அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. அதே நேரத்தில் காய்ச்சல் கண்டவுடன் பதட்டமோ பீதியோ அடைய தேவையில்லை. காய்ச்சல் கண்டவுடன் பொதுமக்கள் மருத்துவர்களையோ, மருத்துவமனையையோ அணுகாமல் தாங்களாகவே மருந்துகளை மருந்து கடையில் வாங்கி உட்கொள்வதையும், அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அனைத்து வகையான காய்ச்சலுக்கும் தேவையான மாத்திரை மருந்துக்கள் போதிய அளவில் அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

iv. அனைத்து மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்ந்த களப்பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்காலிக பணியாளர்கள் மூலம் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொசு உற்பத்தியைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளது /இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

v. ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டுக் குழு (சுயயீனை சுநளயீடிளேந கூநயஅ) இயங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் இக்குழுக்கள் காய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று, காய்ச்சலின் காரணத்தை உடனுக்குடன் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

vi. “எலிசா” முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31-ல் இருந்து 64-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான இரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, மருந்துகள், இரத்தக் கூறுகள் மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

vii. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது.

viii. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய 24 மணி நேர கட்டுபாட்டு அறை ( 24 hour Control Room) பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் செயல்படுகிறது. அதன் தொலைபேசி எண்கள் – 044-24350496, 044- 24334811, 104 கைபேசி எண் 94443 40496. மேலும் 104 - தொலைபேசி வசதியையும் பொதுமக்கள் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

ix. மேலும், டெங்கு மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்களின் நிலைமை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழு வாரம் தவறாமல் ஆய்வு செய்து வருகிறது.

மேலும் மாண்புமிகுஅமைச்சர் பெருமக்கள் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கீழ்கண்டவாறு அறிவுரை வழங்கினார்கள்.

1) சுகாதாரமான குடிநீரை அன்றாடம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரில் குறைந்தபட்ச குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திறந்த நிலை கிணறுகள் போன்ற நீராதாரங்களில் குளோரின் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் மேல்நிலை தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

2) வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர், கொட்டாங்கச்சி மற்றும் திறந்த நிலை தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால்களை தினமும் சுத்தப்படுத்தி வடிகாலில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு மருந்தை சரியான கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

3) பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து சுகாதார பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

4) தொற்று நோய்களைப் பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

5) மாநகராட்சி மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள காலிமனைகளில் சில இடங்களில் பொது மக்களால் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பை கூளங்களை, அவ்விடம் தனியார் இடம் என்றும் பாராமல் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொசுமுட்டை மற்றும் புழுக்களை ஒழித்திட தேவையான அளவு மருந்தினை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்

6) புகை அடிக்கும் இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படின் உடனடியாக புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) மகளிர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தில் உள்ள அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரை தொற்று நோய் ஒழிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக கைபிரதிகள் வழங்குதல், ஊர்வலம், தகவல் கல்வி மற்றும் தொடர்பு ஆகிய முறைகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) தொற்று நோய் பாதிப்புகள் அறியப்பட்டுள்ள இடங்களில் மேற்படி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற ஏதுவாக சிறப்பு குழுக்கள் அமைத்து சுகாதார துறை அலுவலர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மேற்கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி நகராட்சி நிர்வாகம் (ம) ஊரக வளர்ச்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் முழு ஒத்துழைப்போடு தொடர் நடவடிக்கைகளின் மூலம் தொற்று நோய் பரவாமல் முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தி முற்றிலுமாக தடுத்திட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மருத்துவர்கள், மற்ற துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

எனவே, பொதுமக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வுடன் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் அரசு பொது மருத்துவமனை,காஞ்சிபுரம் பேருந்து நிலையம், அம்மா உணவகம், பி.எஸ்.கே.நகர் ஆகியவற்றை ஆகியவற்றை மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு செய்து நிலவேம்புக் குடிநீர் வழங்கும் பணியும் ஒட்டுமொத்த துப்புரவு பணியும் தொடக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் திரு.பா.கணேசன்,மொளச்சூர் திரு.இரா.பெருமாள், திருமதி.கணிதா சம்பத்திரு.பி.தன்சிங், திரு.கே.மனோகரன், திரு.வி.என்.பி.வெங்கடராமண், திரு.கே.பி.கந்தன், மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை செயலர் திரு. ஜெ. ராதாகிருஷ்ணன்,இஆப., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் திரு. மோகன் பியாரே, இஆப., ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.பாஸ்கரன் இ.ஆ.ப , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர். கெஜலட்சுமி இஆப., மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் டாக்டர் அ.சந்திரநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி, காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் திருமதி.மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நகராட்சி நிர்வாகம் (ம) ஊரக வளர்ச்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

The Training in Traditional Arts for the Youth

கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

"பாரம்பரிய கிராமியக் கலைகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்தல் "

கலை பண்பாட்டுத்துறையின் அங்கமாகத் திகழும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், முத்தமிழான இயல், இசை, நாடகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு கலைப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு தமிழக கலை வடிவங்கள் அழிந்து வரும் நிலையில், அக்கலைகளை இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சென்றால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதால், ஆர்வமுள்ள இளங்கலைஞர்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுநர்களைக் கொண்டு அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளில் இளைய சமுதாயத்தினருக்கு பயிற்சி அளித்திட அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையினை செயல்படுத்திடும் நோக்கில், நாட்டுப்புறக் கலைகளான பொய்க்கால் குதிரை, கரகம், காவடி ஆகியவற்றில் ஒரு மாத பயிற்சி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் 15.11.2015-க்குள் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு தன்விவரக்குறிப்புடன் (Bio-Data) விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் 30 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் (முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்). இப்பயிற்சியானது 23.11.2015 அன்று தொடங்கி ஒரு மாத பயிற்சியாக மாலை நேரத்தில் ( மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை) நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-24937471 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tuesday, November 3, 2015

Statement of CM on Special Buses for Deepavali Festival

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 3.11.2015

தமிழக மக்கள் தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு ஆண்டுகளாக எனது உத்தரவின் பேரில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வந்துள்ளன. அதே போன்று இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி,

1. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 6.11.2015 அன்று 1,106 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,146 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 825 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 1,194 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை மொத்தம் 4,271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

2. இது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து 6.11.2015 அன்று 1,554 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,717 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 1,822 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 2,595 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை 7,688 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

3. மொத்தத்தில் தீபாவளித் திருநாளை ஒட்டி, 6.11.2015 முதல் 9.11.2015 வரை 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

4. இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 10.11.2015 முதல் 16.11.2015 வரை இயக்கப்படும்.

5. மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

6. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் றறற.வளேவஉ.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

7. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்


TN Minister Inaugurated the Dengue fever awareness programme in Chennai

Honble Minister for Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons inaugurated the Dengue fever awareness programme in Chennai


Statement of CM on Calamity Relief Fund Assistance

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 4.11.2015.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முடிய பருவமழை தொடர்ந்து நீடிக்கும். கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நான் அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, பருவமழையின் போது உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படக் கூடும். அவ்வாறு பருவ மழையால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுளேன். பருவமழை காரணமாக ஏற்படும் உயிரிழப்பு, கால்நடை இழப்பு, சேதமடைந்த குடிசைகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன்.

அதன்படி,
மழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 4 லட்சம் ரூபாய்;
முழுவதும் சேதமடைந்த நிரந்தர வீடு ஒன்றுக்கு 95,100 ரூபாய்;
முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 5,000 ரூபாய்;
பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாய்;
மற்றும் 10 கிலோ அரிசி, உடை மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய்;
பசு மற்றும் எருமை மாடு உயிரிழப்புக்கு 30,000 ரூபாய்;
ஆடு, பன்றி உயிரிழப்புக்கு 3,000 ரூபாய்;
கோழி உயிரிழப்புக்கு 100 ரூபாய்;
என நிவாரண உதவித் தொகைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், வெள்ளம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு புடவை, ஒரு வேட்டி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவையும் வழங்கப்படும்.

மழையால் பாதிக்கப்படும் நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500/- ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410/- ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000/- ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுளேன்.

முழுவதும் பாதிக்கப்படும் கட்டு மரம் ஒன்றுக்கு 32,000/- ரூபாய் வழங்கவும், பகுதி பாதிக்கப்பட்டு பழுது பார்க்கப்பட வேண்டிய கட்டு மரங்களுக்கு 10,000 ரூபாய் வீதமும், முழுவதும் பாதிக்கப்படும் FRP வல்லம் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில், அதிகபட்சம் 75,000 ரூபாய் வரையிலும்; பகுதி சேதமடையும் FRP வல்லம் ஆகியவற்றுக்கு 20,000 ரூபாய் என்ற வீதத்திலும்; முழுமையாக சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 35 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்திலும்; பகுதி சேதமடையும் எந்திரப் படகுகளுக்கு பழுது பார்க்கும் செலவில் 60 சதவீதம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய், கட்டுமரங்களுக்கான வலை சேதமடைந்தால் 10,000 ரூபாய்; படகுகளின் வெளிப்புறம் பொருத்தப்படும் எந்திரங்களுக்கு 5,000 ரூபாய் என்ற வீதங்களில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பருவமழையினால் சாலைகள், பாலங்கள், இதர அரசு கட்டடங்கள் ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க உரிய கருத்துருக்களை உடனுக்குடன் அனுப்ப அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

தோட்டக்கலை மற்றும் இயற்கை உரம் தயாரிக்க ஒரு நாள் பயிற்சி


Tamil Nadu Government Multi Super Speciality Hospital - Guidelines and Protocols

வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள்

Guidelines & Protocols

S.No Guidelines and Protocols
1

National Guidelines for Dengue Fever

2

Guidelines for Ebola Virus Disease(EVD)

3

Guidelines on categorization of Seasonal Influenza A H1N1 cases during screening for home isolation, testing, treatment and hospitalization

4

Operational Guidelines on Facility Based Management of Children with Severe Acute Malnutrition

5

Guidelines for Control of Iron Deficiency Anaemia

6

Operational Guidelines for Injection Vitamin K Prophylaxis at Birth

7

Guidelines for Enhancing Optimal Infant and Young Child Feeding practices

8

Standard Treatment Guidelines

9

Operational Guidelines for Optimal feeding of low birth weight infants

10

HOME BASED NEWBORN CARE - Operational Guidelines

11

Operational Guidelines for NATIONAL PROGRAMME FOR PREVENTION AND CONTROL OF CANCER, DIABETES, CARDIOVASCULAR DISEASES & STROKE (NPCDCS)

12

National Guidelines on Prevention , Management and Control of Reproductive Tract Infections including Sexually Transmitted Infections

13

Operational Guidelines for Use of Antenatal Corticosteroids in Preterm Labour

Sunday, November 1, 2015

CM on the Bonus payable to the employees of Government and State undertakings

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 1.11.2015

‘உழைப்பே உயர்வு தரும்’ ‘உழைப்பவர் வளம் பெறுவர்’ என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவார்கள். தொழிலாளர்களின் முன்னேற்றமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முழுமை அடையச் செய்யும். உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. எனவே தான் அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


  •  தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையுடன் கூடுதலாக 10 விழுக்காடு கருணைத் தொகை தற்போது வழங்கப்படும்.
  •  லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில்  பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு பாடநுhல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  • ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் அனைத்து தகுதியுள்ள பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு ஜரிகை ஆலை நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.  மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 464 தொழிலாளர்களுக்கு 242 கோடியே 41 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.


அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

Siddha Ayurveda and yoga U.G course Counseling Postponed

Single Window Counseling for Admissions to U.G.Courses in Siddha, Ayurveda, Yoga & Naturopathy, Unani and Homoeopathy systems of Medicine under Directorate of Indian Medicine and Homoeopathy was held between 25.10.2015 and 28.10.2015 and the selected candidates have been instructed to join the respective colleges on or before 30-10-2015. Now the Department of AYUSH, GOI have extended the cut off date for admission to UG/PG AYUSH courses from 31-10-2015 to 21-11-2015. Hence the joining time, for those who have selected during the above counseling has been extended uniformly upto 6th November 2015. Necessary instructions have been issued to the Principals of ISM&H colleges in this regard. Counselling for wait listed candidates originally scheduled for 31-10-2015 has been postponed to 17-11-2015 ( Tuesday)


Places of Selling Lowest Price Toor Dal in TN

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக 91 அங்காடிகளில் 1.11.2015 அன்று முதல் குறைந்த விலையில் இறக்குமதி துவரம் பருப்பு விற்பனை நடைபெறும்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெளிச்சந்தையில் உயரும் போது, விலைகளை கட்டுக்குள் வைக்கும் தீவிர நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது, துவரம் பருப்பு விலையேற்றத்தினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்துhர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய பெருநகரங்களில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளின் 71 அங்காடிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் நடத்தப்படும் சென்னையிலுள்ள 20 பல்பொருள் அங்காடிகள் வாயிலாக, இறக்குமதி துவரம் பருப்பு 1/2 கிலோ ரூ.55, 1 கிலோ ரூ.110 என்ற அடிப்படையில் 1.11.2015 அன்று முதல் விற்பனை செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டார்கள்.

குறைந்த விலையில் துவரம் பருப்பு விற்பனை சென்னை மாநகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அண்ணாநகர் மேற்கு, நந்தனம், அசோக்நகர், ஆர்.கே. மடம் ரோடு, இந்திராநகர், சி.பி.ஆர். சாலை, பெரியார் நகர், எம்.எம்.டி.எ.காலனி, கோபாலபுரம், அண்ணாநகர் மெயின், தம்பு சாமி ரோடு, அண்ணா நெடும்பாதை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, வி.எம்.தெரு, சாந்தி காலனி, திருவான்மியூர், ஆற்காடு சாலை, ஆவடி மற்றும் போரூர் அமுதம் அங்காடிகள், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் தேனாம்பேட்டை, ஆர்.ஏ.புரம், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, அசோக்நகர், இராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், செனாய் நகர், பெரியார் நகர், மீனம்பாக்கம் மற்றும் துரைப்பாக்கம் சுயசேவைப் பிரிவு விற்பனை நிலையங்கள், பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் அண்ணா நகர், செனாய் நகர் மற்றும் அரும்பாக்கம் விற்பனை நிலையங்கள், வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கொடுங்கையூர், பிராட்வே, மணலி மற்றும் எம்.ஆர்.எப். அங்காடிகள், வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலையின் இராயபுரம் மற்றும் பெரியார் நகர் அங்காடிகள், மாம்பலம் தொடக்க கூட்டுறவு பண்டகசாலையின் மேற்கு மாம்பலம் அங்காடி, அடையார் மகளிர் கூட்டுறவு பண்டகசாலையின் அடையாறு அங்காடி, கஸ்துhரிபாய் மகளிர் கூட்டுறவு பண்டகசாலையின் ஆதம்பாக்கம் அங்காடி, சென்னையில் செயல்படும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளான ஜார்ஜ்டவுன் (சௌகார்பேட்டை), பாரதியார் (புதிய வண்ணாரப்பேட்டை), தட்டான்குளம் (சூளை), ஐ.சி.எப்., தண்டையார் நகர் (தண்டையார் பேட்டை), வியாசர்பாடி ஆகிய விற்பனை நிலையங்களிலும், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நந்தம்பாக்கம், போரூர், மடிப்பாக்கம், தாம்பரம், செம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை விற்பனை நிலையங்கள் ஆகிய 56 இடங்களிலும்,

கோயம்புத்துhர் மாநகரில், கோவை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கோவை வடக்கு, நுhலக கட்டடம் மற்றும் எஸ்.பி. காலனி அங்காடிகள்,  வேலாண்டிபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்க வேலாண்டிபாளையம் அங்காடி, சிங்காநல்லுhர் நகர கூட்டுறவு கடன் சங்க சிங்காநல்லுhர் அங்காடி, எஸ்.ஆர்.எஸ். கூட்டுறவு பண்டகசாலையின் பூ மார்க்கெட் விற்பனை நிலையம், பாப்பநாய்க்கன் புதுhர் கூட்டுறவு பண்டகசாலையின் பி.பி.புதுhர் அங்காடி, தமிழ்நாடு மாநில போக்குவரத்து தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலையின் சேரன் நகர் அங்காடி, குனியமுத்துhர் கூட்டுறவு பண்டக சாலையின் குனியமுத்துhர் அங்காடி, கோயம்புத்துhர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க ஆர்.எஸ்.புரம் அங்காடி ஆகிய 10 விற்பனை அங்காடிகளிலும்,

திருச்சி மாநகரத்தில் திருச்சி சிந்தாமணியின் புதுhர், என்.எஸ்.பி., சாலை, கைலாசபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் அங்காடிகள், திருச்சி அமராவதியின் பழைய சரக்கு வாகன சாலை கைலாசபுரம், பொன்மலை, சுப்பிரமணியபுரம் மற்றும் ஸ்ரீநிவாச நகர் அங்காடிகள், ஸ்ரீரெங்கநாத தொடக்க கூட்டுறவு பண்டகசாலையின் ஸ்ரீரங்கம் அங்காடி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் மங்கம்மாள் சாலை அங்காடி, தென்சென்னை மின்வாரிய ஊழியர்கள் கூட்டுறவு சங்க மன்னார்புரம் மற்றும் வாமடம் அங்காடிகள், திருவானைக்கோயில் கூட்டுறவு சங்க திருவானைக்கோயில் அங்காடி ஆகிய 14 விற்பனை அங்காடிகளிலும்

மதுரை மாநகரில் மதுரை பாண்டியன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் அரண்மனை சாலை, திருநகர் மற்றும் அழகப்பன் நகர் அங்காடிகள், டி.வி.எஸ் கூட்டுறவு சங்கத்தின் டி.வி.எஸ் நகர் அங்காடி, மதுரா கோட்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொன்னகரம் மற்றும் கே.கே.நகர் அங்காடி, மதுரை பெண்கள் கூட்டுறவு சங்க ரேஸ் கோர்ஸ் காலனி அங்காடி, தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவு பண்டகசாலையின் பழங்காநத்தம் மற்றும் கே.புதுhர் அங்காடிகள், ஸ்ரீ மீனாட்சி மில் தொழிலாளர்கள் கூட்டுறவு பண்டகசாலையின் சுந்தரராஜபுரம் அங்காடி மற்றும் திருமங்கலம் மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சங்க திருமங்கலம் அங்காடி ஆகிய 11 விற்பனை அங்காடிகளிலும் ஆக மொத்தம் 91 விற்பனை அங்காடிகள் வாயிலாக இறக்குமதி துவரம்பருப்பு ஙூ கிலோ ரூ.55/- மற்றும் 1கிலோ ரூ.110/- என்ற அடிப்படையில் 01.11.2015 அன்று முதல் விற்பனை செய்யப்படும்.

குறைந்த விலையில் இறக்குமதி துவரம்பருப்பு விற்பனைத் திட்டம் துவங்கப்படும் தினமான 01.11.2015 ஞாயிற்றுகிழமை அன்றும் மேற்கண்ட 91 அங்காடிகளும் திறக்கப்பட்டு குறைந்த விலை இறக்குமதி துவரம்பருப்பு விற்பனை செய்யப்படும்.