Showing posts with label CM Statement on Administrations to gear up for rains. Show all posts
Showing posts with label CM Statement on Administrations to gear up for rains. Show all posts

Wednesday, November 11, 2015

CM Statement on Administrations to gear up for rains

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உயர்அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்கள். இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்வாரியம், காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் வடக்குப் பகுதியிலுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

சென்னை மாநகரில் 131 பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் 4000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களைக் கொண்டு பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றியது. மேலும், சாலைகளில் விழுந்துகிடந்த 125 மரங்கள் அகற்றப்பட்டு சாலை போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் தீபாவளிக்காக பல்வேறு பொருள்களை வாங்கும் கடைவீதிகளில் சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு 8000 உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சியிலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு நிவராணப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை மாநகரில் மழை நிவாரணப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர்

திருமதி பா வளர்மதி, மாண்புமிகு கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ் கோகுல இந்திரா, மாநகராட்சி மேயர் திரு சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர், இஆப மற்றும் உயர் அதிகாரிகள் மழைநீரை அகற்றும் பணிகளைப் மேற்பார்வையிட்டு சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இந்திய வானிலை மையம் அறிக்கையின்படி வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூருக்கு அருகிலேயே நிலை கொண்டு மாலை 8.45 மணியளவில் கரையை கடந்தது. இதனால் கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து அதிகளவில் மழை பெய்யும் என்றும் வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரளவிற்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மணிக்கு 45கி மீ முதல் 55 கி மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

இன்று (9.11.2015) காலை முதல் கடலூர் மாவட்டத்தில் 13.7 செ.மீ மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 32 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழ் நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை

நடவடிக்கையாக இன்று காலையிலிருந்து கடலூர் மாவட்டத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளது. மாலையிலிருந்து படிப்படியாக மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 650 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விருத்தாச்சலம் வட்டத்திலுள்ள வடக்கு வேலூர் கிராமம் மழை நீரால் சூழப்பட்டதால் 150 குடும்பங்கள் மேடான பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் நிவாரணக்குழு கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரையோரங்களில் வாழும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பால் விநியோகம் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் நிவராணம் மற்றும் சீரமைப்புப்பணிகளை மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் திரு டி கே எம் சின்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்தில் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு பி வி ரமணா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து செல்லும் போது திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை அனுப்ப உத்தரவிட்டதின் பேரில் கடலூர் மாவட்டத்திற்கு திரு ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு திரு பிரதீப் யாதவ் இ.ஆ.ப, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு திரு ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் திரு மஞ்சுநாதா இ.கா.ப அவர்கள் கடலூரில் முகாமிட்டுள்ளார்.