Friday, November 6, 2015

Statement From the Health and Family Welfare Department

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

547 சிறப்புப்பிரிவு உதவிமருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் அறிவிப்பு:-

2012–ஆம் ஆண்டில், நாட்டிலேயே முதன் முறையாக, மருத்துவப் பணியாளர்களை தேர்வுசெய்ய, மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தால் மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் இதுவரை 14,208 மருத்துவர் மற்றும் இதரபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, 2013-14-ஆம் ஆண்டில் 3015 உதவிமருத்துவர் பணியிடங்களும், 2014-15 ஆம் ஆண்டில் 2645 உதவிமருத்துவ அலுவலர்களின் காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது அரசு மருத்துவ நிலையங்களில் 34 சிறப்புபிரிவுகளில் காலியாகவுள்ள 547 உதவிமருத்துவர் (Assistant Surgeon in 34 different Specialities) பணியிடங்களை விரைவாக நிரப்ப ஏதுவாக வாக்-இன் (Walk-in selection process) தேர்வு முறை என்ற எளிய முறையில் சிறப்புப்பிரிவு பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்து அதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 547 சிறப்புப்பிரிவு உதவி மருத்துவர்களை நியமிக்க 25.10.2015 அன்று விரிவான அறிவிப்பினை www.mrb.tn.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் 16.11.2015 வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.mrb.tn.gov.in) ஆன்-லைன் (Walk-in selection process)மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு, நடைமுறையிலுள்ள இடஒதுக்கீடு விதிமுறைகளுக்குட்பட்டு வாக்-இன் (றுயடம-in ளநடநஉவiடிn யீசடிஉநளள) தேர்வுமுறையின் மூலம் காலியாக உள்ள 547 சிறப்புப்பிரிவு மருத்துவ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள மருத்துவர்கள் அனைவரும் 16.11.2015-க்குள் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள்.

Communique of Finance Department

FINANCE (WAYS AND MEANS - II) DEPARTMENT

Government of Tamil Nadu has announced the sale of 10 year securities in the form of Stock to the Public by auction for an aggregat e amount of Rs.1200.00 Crore. The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on November 10, 2015. Competitive bids between 10.30 A.M. and 12.00 P.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on November 10, 2015.

 K. SHANMUGAM,
Principal Secretary to
 Government of Tamil Nadu,
 Finance Department, Chennai-9


Free Training for TNPSC Group II Examination

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் TNPSC Group-II தேர்விற்கு இலவச பயிற்சி

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி -I, தொகுதி-II தொகுதி IV, கிராம நிர்வாக உதவியாளர்), IBPS தேர்வுகள், ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. மேலும், இவ்வட்டங்களில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் உள்ளன.

 தற்போது TNPSC Group-II (A) ல் உள்ள Personal Clerk, Assistant, Planning Junior Assistant, Lower Division Clerk and Junior Co-Operative Auditor ஆகிய பணிகளுக்கான 1947 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11/11/2015 ஆகும். இத்தேர்விற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும், வாரம் ஒருமுறை தேர்வு மற்றும் பயிற்சி இறுதியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 சி.சமயமூர்த்தி,
 இயக்குநர். வேலைவாய்ப்பு மற்றும்
 பயிற்சித்துறை, இயக்ககம், சென்னை-32



Art and Culture Department on financial Assistance to the best Artist

கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு

தமிழக அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறையின் அங்கமான, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனியாக தனிநபர் கண்காட்சியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக்கண்காட்சியாகவோ நடத்த அரசின் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகுதிவாய்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறை – ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (BIO- DATA), சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் ( 5 எண்ணிக்கைகள் ), அவரவர்கள் படைப்புத்திறன் பற்றிய செய்திக் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 30.11.2015-க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)

ஆணையர்(பொ),கலை பண்பாட்டுத்துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்,
 தமிழ்ச்சாலை, எழும்பூர்,சென்னை-600 008.
தொலைபேசி : 044-28193195, 28192152



Job opportunity in Sharjah, United Arab Emirates for Clerks and Drivers

The Overseas Manpower Corporation Ltd., Chennai - Job opportunity in Sharjah, United Arab Emirates for Clerks and Drivers

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான சார்ஜாவிற்கு 30 முதல் 35 வயதிற்குட்பட்டு செல்லத்தக்க ஐக்கிய அரபு குடியரசு ஓட்டுநர் உரிமம் எண்.3 வைத்துள்ள இரண்டு இலகுரக வாகன ஓட்டுநர்கள், உரிமம் எண்.3 & 6 வைத்துள்ள ஒரு பஸ் ஓட்டுநர் மற்றும் உரிமம் எண் 7 & 8 வைத்துள்ள இரண்டு போர்க்லிப்ட் (Forklift) & ஜேவிசி ஓட்டுநர்கள் மற்றும் எட்டு வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்டு பி.காம் தேர்ச்சி பெற்று கணக்குப் பிரிவில் அனுபவமுள்ள 2 கிளார்க் (Clerk)மற்றும் தட்டச்சர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான பணி விவரங்கள், அனுபவம், வயது வரம்பு, ஊதியம், மற்றும் இதர சலுகைகளை  www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் இருப்பின் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி தொழிற்பேட்டை, சென்னை 600 032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு  www.omcmanpower.com என்ற ஈமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.